உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அரங்கேறுவதை நாம் அறிவோம். இந்த நிகழ்வை பார்க்க ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்தாண்டுக்கான மதுரை கள்ளழகர் திருவிழா வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2024 TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் கட்டாயம்? மாஸ் டிப்ஸ்!!!
இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வதால் நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு பலப்படுத்தவும் ஏற்பாடு செய்ய உள்ளனர்.மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.