நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம், கடந்த மார்ச் 11 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரும்பப்பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 230 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
மதுரை மக்களே ரெடியா? கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!
இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (மார்ச் 19) உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், “குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளுக்கு எதிராக பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய பதிலை, மத்திய அரசு வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை, ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.