தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
rain

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குக் வித் கோமாளி புகழ் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

மேலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here