அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கொட்டிய மழையில் சென்னை, மதுரை, குற்றாலம் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துளள்னர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

weather forecast
weather forecast

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் என கூறப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் பகுதியில் 21 செமீ, ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி பகுதியில் 13 செமீ மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மதுரையில் உள்ள பேரையூர் மற்றும் திருநெல்வேலியின் மணிமுத்தாறு பகுதியில் தலா 7 செமீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 48 மணிநேரத்திற்கு கேரள மற்றும் கர்நாடக கடற்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் & லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here