தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருக்கும் நிலையில் அது புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் புதிதாக ஒரு தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோடை காலம் முடிவடையும் நிலையில் இனி தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்து வரும் நிலையில், வருகிற ஜூன் 10ம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.