இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், சிறப்பு போனஸ், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பணியாளர்களான ஆஷா (ASHA) ஊழியர்களுக்கு இத்தகை சலுகைகள் அனைத்தும் முழுமையாக கிடைக்க பெறுவது இல்லை. இந்த ஆஷா ஊழியர்கள் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தெலுங்கானா மாநில அரசு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.
2024 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது., முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!
அதாவது, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா உருவான ஆண்டு விழாவை 21 நாட்கள் அம்மாநில அரசு கொண்டாடி வருகிறது. இதில், ஆஷா ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக வரும் ஜூன் 14ம் தேதி தெலுங்கானா சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.