தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை பணி வழங்கப்படவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி தற்போது வரை மட்டும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 80,000 பேர் பணியிடம் குறித்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர். ஏன் கடந்த பிப்ரவரியில் கூட ஆசிரியர்களுக்கு TET தேர்வு நடைபெற்று முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால் அதன் பிறகு பணியிடம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து சமீபத்தில் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய போது தேர்வில் வெற்றி பெற்றவர்களை பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தனர்.
அடுத்த 10 நாளைக்கு இந்தந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் முடிவெடுப்பதாக சொல்ல 25 நாட்கள் கடந்து விட்டன. ஆனாலும் தற்போது வரை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நேரடி பணியமர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக அரசு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விஷயத்தில் அலட்சியம் மிகவும் தவறு. மேலும் தமிழக அரசு ஆசிரியர்களை பணியமர்த்துவதில் காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 57 க உயர்த்துவது குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.