இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை:
இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாளை (09/01/2021) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை மறுநாள் (10/01/2021) ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.
தமிழகத்தில் வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் விமான சேவை மீண்டும் துவக்கம் – பல கட்டுப்பாடுகளுடன் டெல்லியில் களமிறங்கிய விமானம்!!
தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, மதுரை மற்றும் நத்தம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.