தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தமிழகத்தில் இன்னும் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே நிலை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் நெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வந்தது. கடந்த மாதம் நிவர் புயல் தமிழகம் மற்றும் அதனை சுற்றிருந்த பகுதிகளை தாக்கியது. இப்படியான நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அனைத்தும் வலுவிழந்து விட்டது.

உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் – பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் ட்வீட்!!

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளது. ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here