ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை தோல்விகளை சந்திக்காத இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி ஆகி உள்ளது. இந்த சூழலில் 5 ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற நாளை (நவ.11) இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டியில் முதல் பேட்டிங் தேர்வு செய்து 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும்.
இதன்பின் இங்கிலாந்து அணியை 2.3 ஓவர்களில் 50 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வாய்ப்பில்லை என கூறுகின்றனர். இந்த நிலையில் பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சர்ச்சைக்குரிய ஐடியாவை கூறியுள்ளார். அதாவது “பாக். அணி முதலில் பேட்டிங் செய்து இமாலய ஸ்கொர் அடிக்க வேண்டும். இதன்பின் இங்கிலாந்து அணி வீரர்களை ட்ரெஸிங் ரூமில் வைத்து பூட்டி வைத்து “டைம்டு அவுட்” முறையில் வெற்றி பெற்று விடலாம்.” என தெரிவித்துள்ளது. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.