SSC தேர்வர்களே.., 84,866 காலிப்பணியிடங்கள் வெளியீடு.., 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை SSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 84, 866 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தேர்வுக்கு நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேர்வுக்கான விவரங்கள்:
- 18 முதல் 23 வயதுக்குட்பட்ட அனைவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
- மேலும் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் SC, ST பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
- இந்தத் தேர்வுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என SSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
- இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கணினி அடிப்படையில் சோதனை, உடல்நிலை சோதனை, விளையாட்டுத் திறன் மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.