கடந்த நவம்பர் மாதம் முதல் 4 நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. தற்போது அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியில் வெளியாகியுள்ளது.
வாக்காளர்:
தற்போது தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் காட்சிகள் அனைத்து பிரச்சாரம், கூட்டணி பற்றிய முடிவுகள் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை போலவே தேர்தல் அதிகாரிகளும் மிக மும்முரமாக தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது வர போகும் சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர் பட்டியல் குறித்து ஓர் தகவல் வந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இறுதி வாக்காளர் பட்டியல்:
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 4 நாட்கள் ஓர் முகாம் நடைபெற்றது. அது என்னவென்றால் புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்கு, வாக்காளர் அட்டையில் திருத்தும் செய்வதற்கு போன்ற பணிகளுக்காகஅந்த முகாம் நடத்தப்பட்டது. தற்போது அந்த படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளது. சரியான முறையில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 6,26,74,446 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.ஆண்களை பொறுத்தவரை 3 கொடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர்.
பெண்களை பொறுத்தவரை 3 கொடியே 18 லட்சத்து 28 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் உள்ளனர். தற்போது ஆண்களை விட பெண்கள் வாக்காளர் சுமார் 9,90,254 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர். மேலும் சென்னையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிடவுள்ளார். மேலும் தேசிய வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி அன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சில வாக்காளர்களுக்கு, வாக்காளர் அட்டை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி அழைப்பு!!
தமிழகத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அங்கில்லை 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்தில் குறைந்த அப்பட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1,76,272 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.