தற்போது நடந்து முடிந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 4 ன் வெற்றியாளாரான ஆரி அர்ஜுனன் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தில் புதுமுக இயக்குனருடன் கைகோர்க்கும் ஆரி காவல்துறை அதிகாரியாக நடிப்பது கூடுதல் தகவல்.
ஆரியின் புதிய படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் பிக்பாஸ் முடிந்த கையோடு தற்போது புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டைரக்டர் சங்கர் இயக்கத்தில் ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தில் முதல்முறையாக நடிகராக அறிமுகமான ஆரி தொடர்ந்து ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’, ‘மாயா’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையாலும் நேர்மையாலும் பாராட்டப்பட்ட இவர் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். நேற்று இவரது புதிய படத்தின் பூஜை நடந்திருக்கிறது. அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் ஆரி. பூஜையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கலந்துகொண்டார். இப்படத்தில் ஆரியுடன் நடிகை வித்யா பிரதீப் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளார் ஏ.ஆர் ரஹ்மான் இசைக்குழுவில் இருந்த ஸ்டெர்லின் சத்யா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
#INDvsENG டெஸ்ட் தொடர் – நடராஜன் நீக்கம்!! முதல் இரண்டு போட்டிக்கான வீரர்கள் பெயர் அறிவிப்பு!!
மேலும் இவரது நடிப்பில் இன்னும் பல படங்கள் வெளிவரவுள்ளது. நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் ‘அலேகா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 ன் புகழ் லாஸ்லியாவுடன் ஜோடி சேர உள்ளார். இவர் நடித்துள்ள பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.