சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை அதிகரித்து நேற்றைய விலையை விட 100 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டு ஒரு கிராம் 71 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரிப்பு
கடந்த இரு வாரங்களாக எந்த அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்து வந்ததோ அதற்கு அதிகமாகவே தற்போது ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சவரனுக்கு 1000 ரூபாய் வரை குறைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது உயரத்தில் ஏறிக்கொண்டே போகிறது. நேற்று காலையில் விற்பனை செய்யப்பட்டுவந்த விலை நேற்று மாலையில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி அழைப்பு!!
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.36,976 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.37,152க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,644 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றய விலையை விட ஒரு ரூபாய் வரை அதிகரித்து ரூ.71.20 காசுகளுக்கு விற்கப்படுகிறது.