இந்தியாவில் வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச அளவிலான 10 அணிகள் மோத உள்ள இந்த தொடரில், சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஐசிசியானது 11 வீரர்கள் கொண்ட கனவு அணியை தேர்வு செய்யும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த கனவு அணியில், கட்டாயம் இடம் பிடிக்க கூடிய 5 வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதில், இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் ஆகியோரும் ஐசிசியின் கனவு அணியில் இடம் பிடிப்பர் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.