ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். மேலும், ஒவ்வொரு அணியும் தங்களது, புது ஜெர்சியையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில், பெங்களூரின் RCB அணியானது, மார்ச் 19 (நாளை) முன்னாள் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அன்பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் தங்களது ஜெர்சியை அறிமுகப்படுத்த உள்ளன.
இவரை தொடர்ந்து, RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அணியில் இணைந்துள்ளார். இதனை, RCB அணி தனது அதிகாரப்பூர்வமான X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. RCB அணியானது, ஐபிஎல்லில் இதுவரை நடைபெற்றுள்ள 16 சீசன்களில் ஒரு முறை கூட பதக்கத்தை வெல்லவில்லை. ஆனால், மற்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க கூடிய அணியாக திகழ்ந்து வந்துள்ளது. இந்த முறை, பதக்கம் வெல்லாத குறையை RCB அணி தீர்த்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
Daddy’s Home and he is ready to reign again! 👑
Virat Kohli checked in to Namma Bengaluru, and we can’t keep calm. Happy #Homecoming, @imVkohli! ❤🔥🏡#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/KLWKz788wx
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2024