இந்திய ஆடவர் அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் நேற்று ( ஜனவரி 22) ஓர் அதிர்ச்சி அறிவிப்பு வெளியானது. அதாவது இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, நேற்று முதலே அந்த காரணங்கள் என்ன என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘அந்த காரணங்கள்’ என்ன என்பது குறித்து தேவையற்ற யூகங்களை கிளப்ப வேண்டாம். இந்த நேரத்தில் அவரது தனி உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் பிசிசிஐ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் நாளை கரண்ட் இருக்காது.., மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!!