இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் RCB அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் RCB அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது T20 கிரிக்கெட் வரலாற்றில் 100 முறை ஐம்பது பிளஸ் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனை படைத்த விராட் கோலிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே.,தேர்தல் பணிக்கான உழைப்பூதிய விவரம்., செக் பண்ணிக்கோங்க!!!