இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த SRH அணி 186 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் RCB அணி களமிறங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், விராட் கோலி (100), ஃபாஃப் டு பிளெசிஸ் (71) என முதல் விக்கெட்டுக்கே 172 ரன்களை விளாசி அசத்தி இருந்தனர். கிளென் மேக்ஸ்வெல் 5, மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன்கள் எடுத்து RCB அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற RCB அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதோடு, புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது .
இந்த போட்டியில், 63 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்ஸர் என சதம் விளாசிய விராட் கோலி அனைத்து வடிவிலும் மகத்தான சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல்லில் அதிக சதம் (6) அடித்த இந்தியர், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக (46) சதங்கள், டெஸ்டில் ஒரு இந்தியரின் நான்காவது அதிக (28) சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக (75) சதங்கள் என சதங்களின் நாயகனாக விராட் கோலி திகழ்கிறார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் 8வது முறை 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரராகவும் உள்ளார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகளில் 538 ரன்களை இவர் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.