தமிழகத்தில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதை தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆம், 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா கூறுகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிகள் தற்போது வெளியாகியுள்ளது . இந்த தேர்வை ,மொத்தம் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.16% தேர்ச்சியும், மாணவிகள் 94.66% தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.