விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்…, 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!

0
விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்..., 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!
விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்..., 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்திருந்தாலும், கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகள் இவருக்கு சரியாக அமையவில்லை. அதாவது, இந்த குறிப்பிட்ட காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் பார்மின்றி தடுமாற, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி தவித்தார். இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக, ஒரு மாதம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் விளைவு தான், இதை நாளில் (செப்டம்பர் 8, 2022) சர்வதேச அளவிலான டி 20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து பார்மை மீட்டெடுத்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிட்டத்தட்ட 1021 நாட்களுக்குப் பிறகு ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இதனை தொடர்ந்து பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், சதம் அடித்து தனது பார்மை நிலை நிறுத்திக் கொண்டார். தற்போது, வரை சர்வதேச அளவில் 76 சதங்களை அடித்துள்ள இவர், சச்சினின் 100வது சதத்தை விரைவில் எட்ட கூடிய ஒரே வீரராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here