கதிர் வீட்டுக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர்.,, சுயநலமாக பேசும் முல்லை அம்மா.,, விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
கதிர் வீட்டுக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர்.,, சுயநலமாக பேசும் முல்லை அம்மா.,, விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
கதிர் வீட்டுக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர்.,, சுயநலமாக பேசும் முல்லை அம்மா.,, விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜனார்த்தன் கதிர் பணம் கொண்டு வந்து சவாலில் ஜெயித்து விட்டார் என்ற கோபத்தில் மூர்த்தி குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இன்று, மூர்த்தி குடும்பத்தினர் அனைவரையும், ஜனார்த்தன் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இதையடுத்து அனைவரும் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு கதிர் வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டு வாசலுக்கு சென்ற பின் அனைவரும் வீட்டை பார்த்து வருத்தப்படுகின்றனர், ஐஸ்வர்யா தனது பியூட்டி பார்லர் போர்டை பார்த்து கண் கலங்கிறார். மேலும் முல்லை அப்பா, ஜனார்தனுக்கு சாபம் கொடுக்கிறார். அனைவரையும் வெளியேற்றி விட்டோம் என்ற கெத்தில் ஜனார்த்தன் வீட்டிற்குள் அமர்ந்து இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அடுத்து குடும்பத்தினர் அனைவரும் கதிர் வீட்டுக்கு வந்து விட்டனர். முல்லை அவரது அம்மாவிடம் சாவியை வாங்கி வீட்டை திறக்க, அண்ணா அண்ணி எல்லாரும் வாங்க என்று அனைவரையும் வரவேற்கிறார் கதிர் . இந்த பக்கம் முல்லை அம்மா, அவரது கணவரிடம் கதிரையும் முல்லையையும் திட்டுகிறார், வின் பண்ண பணத்தை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழமா, இப்படி எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்காரு என்று சொல்ல, முல்லை அப்பா நீ கொஞ்சம் பேசாம இரு, இந்த மாதிரி சூழ்நிலைல இப்படி பேசக்கூடாது என்று கூறுகிறார்.

நடிகர் மகேஷ் பாபு அப்பா திடிர் மறைவு., தாய் இறந்த கொஞ்ச நாளிலேயே, தந்தையும் மறைந்த சோகம்!!

இன்னொரு பக்கம், தனம் நம்ம புது வீடு கட்டி போகணும்னு , நினைச்சுகிட்டு இருந்தோம் இப்போ அதுக்கு முன்னாடியே வெளில வந்துடோம்னு தான் நினைச்சிக்கணும், யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்கிறார்.இதையடுத்து மூர்த்தி நம்ம எல்லாரும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கிறதே பெரிய சந்தோஷம் என்று கூறுகிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா, கண்ணன் பேசிக்கொண்டு இருக்கும்போது மீனா போய், என்ன பண்ணுறீங்க என்று கேட்க நாங்க இங்க பியூட்டி பார்லர் எங்க வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்னு சொல்கிறார். இதற்கு மீனா இங்க தூங்கவே இடம் இல்லை நீ பியூட்டி பார்லர் வைக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல இருவருக்கும் சின்ன வாக்குவாதம் வந்துவிட்டது. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here