ஜீவா, கதிர், மூர்த்தி ஒன்று சேர்ந்ததை பார்த்து கருகும் முல்லையின் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!

0
ஜீவா, கதிர், மூர்த்தி ஒன்று சேர்ந்ததை பார்த்து கருகும் முல்லையின் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!
ஜீவா, கதிர், மூர்த்தி ஒன்று சேர்ந்ததை பார்த்து கருகும் முல்லையின் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லை சிகிச்சைக்கு செலவு செய்த பணத்தை திரும்பி கொடுத்துவிட்டு தான் வீட்டிற்குள் வருவதாக சவால் விட்டு இருந்தார் கதிர். அந்த தருணம் விரைவில் அரங்கேற உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிருக்கு ஒரு பிரச்சனை என்று கேள்வி பட்டதும் ஜீவாவும், மூர்த்தியும் மின்னல் வேகத்தில் வந்து கதிரை காப்பற்றியுள்ளனர். இதை அடுத்து சூப்பர் ஜோடி போட்டிக்கான ரிசல்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் கதிர்-முல்லை தான் வெற்றி பெற்று 10 லட்ச ரூபாய் பரிசை வென்றுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மூர்த்தி, கதிர், ஜீவா, முல்லை ஆகியோர் குன்றக்குடிக்கு திரும்புகின்றனர். போகும் வழியில் ஒரு கடையில் நின்று டீ குடித்து கொண்டிருக்கும் போது, கதிர் மூர்த்தியை பார்த்து கொண்டே இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு ஜீவா என்ன அண்ணன புதுசா பாக்குறமாரி பாக்குற என கேட்க, அதற்கு கதிர் நாம பேசிக்கமா இருந்தோம் இருந்தாலும் எனக்கு ஒரு ஆபத்துனதும் நீங்க ரெண்டு பேரும் வேகமாக வந்துடீங்களே, அதுதான் எனக்கு பெரிய சந்தோசம் என ஜீவா, மூர்த்தியை கட்டிப்பிடித்து பீல் பண்ணுகிறார் கதிர். இதையடுத்து அனைவரும் கதிர் வீட்டுக்கு வந்துவிட்டனர், அப்போது முல்லை அம்மா, என்ன எல்லாரும் ஒண்ணா வரீங்க எங்க போனீங்க, முல்லை உனக்கு போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்னு வருது என சத்தம் போடுகிறார்.

அதற்கு முல்லை என்ன நடந்துச்சுனு உனக்கு விளக்கமா சொல்றேன்னு அவர் வாயை அடைத்து விட்டார். இதையடுத்து மூர்த்தி, ஜீவாவை வீட்டுக்கு போகலானு கூப்பிட, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகொள்கின்றனர். ஜீவா, அண்ணா கதிர வீட்டுக்கு கூப்பிடுங்க அவன் ஓடி வந்துருவான் என மனசுக்குள் நினைக்கிறார். இதையடுத்து கதிரும் என்னை வீட்டுக்கு கூப்பிடுங்க அண்ணா என ஏக்கமாக பார்க்கிறார்.

சந்தியாவை மட்டம் தட்டி பேசும் ஆதி.., மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் சிவகாமி.., ராஜா ராணி 2 எபிசோடு!!

இருப்பினும் மூர்த்தி தயக்கத்தில் காரில் ஏற போனார். இதை பார்த்து கதிரும், ஜீவாவும் வருத்தப்பட்டனர் இருப்பினும் தீடீரென மூர்த்தி காரில் இருந்து இறங்கி, கதிரிடம் நான் ஒன்னு சொன்னா கேப்பியா என கேட்க இன்றைய எபிசோட் முடிவடைகிறது. வரும் எபிசோடுகளில் கதிர் அவர் போட்டியில் வின் செய்த 10 லட்ச ரூபாயை அண்ணனிடம் கொடுத்து விட்ட சவாலில் ஜெயித்து விட்டு மீண்டும் தன் வீட்டிற்குள் போவார் என்ற நோக்கில் கதை நகர உள்ளது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here