“தமிழ், ஆங்கிலம்” மட்டுமே மாணவர்களுக்கு போதும்.., ஹிந்தி தேவையில்லை.., அமைச்சர் பொன்முடி!!

0
"தமிழ், ஆங்கிலம்" மட்டுமே மாணவர்களுக்கு போதும்.., ஹிந்தி தேவையில்லை.., அமைச்சர் பொன்முடி!!

தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வியை குறித்த புதிய திட்டம் ஒன்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

புதிய திட்டம்:

தமிழக அரசாங்கம் மாணவர்களின் கல்விக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கல்வியையும், சுகாதாரத்தையும் தனது இரு கண்களாக கருதி நன்றாக பணியாற்றி வருகிறார். இதை தொடர்ந்து இந்த கல்லூரியில் அதிகமான பெண்கள் படிக்கின்றனர்.

தமிழக கல்லூரிகளுக்கு புதிய அறிவிப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்! அரசாணை வெளியீடு!!

இது தான் திமுக ஆட்சி என்று புகழாரம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு தனி கல்வி திட்டம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியை உள்ளே நுழைக்க பார்க்கிறார்கள் என்றும் அதற்கு திமுக ஆட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளே போதுமானது என்றும் மாணவர்கள் விரும்பினால் ஹிந்தி மொழியை பயின்று கொள்ளலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here