மாறி மாறி அசிங்கப்படுத்தும் கோபி, செழியன் – மனம் வெறுத்து கலங்கிப்போன பாக்கியா!!

0
மாறி மாறி அசிங்கப்படுத்தும் கோபி, செழியன் - மனம் வெறுத்து கலங்கிப்போன பாக்யா!!
மாறி மாறி அசிங்கப்படுத்தும் கோபி, செழியன் - மனம் வெறுத்து கலங்கிப்போன பாக்யா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோடில், பாக்கியா தனது கணவர் மற்றும் மூத்த மகனால் அசிங்கப்படுத்தப்பட்டதை பார்த்து ரசிகர்கள் கலங்கி போயினர்.

ரசிகர்கள் கலக்கம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரின் நேற்றைய எபிசோடில் பாக்கியா தொடர்ந்து பல அவமானங்களை சந்திக்கிறார். அதாவது வீட்டு செலவிற்காக, கோபியிடம் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக தாருங்கள் எனக் கேட்டதால், கோபி பாக்கியாவை கண்டபடி வசைபாடுகிறார்.

ஆனால், அதை பொருட்படுத்தாமல் மாமனாரின் மருத்துவ செலவிற்கு கோபியிடம் வெட்கத்தை விட்டு பணம் கேட்கிறார். அதுபோல, அந்த பணம் போதாததால் மூத்த மகன் செழியனிடம் செலவுக்கு காசு கேட்கிறார். ஆனால், செழியனும் இவரை வாய்க்கு வந்தபடி திட்டி, நீங்கதான் தன்னிச்சையாக செயல்படுவேன்னு சொன்னீங்களே என குத்திக் காட்டிப் பேசுகிறார்.

இதனால் மனம் நொந்த பாக்கியாவிற்கு, அவரது இளைய மகன் எழில் பண உதவி செய்கிறார். தொடர்ந்து கோபியும், செழியனும் பாக்கியாவை அவமானப்படுத்தி வருவதால், ரசிகர்கள் இருவரையும் திட்டி தீர்த்து வருகின்றனர். தாய்க்கு பக்க பலமாக இருக்கும் எழிலையும், மற்ற குடும்பத்தினரையும் பார்த்து ரசிகர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here