இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. அம்மா மீதான பாசத்தால் பிச்சைக்காரனாக மாறும் கோடீஸ்வரனைப் பற்றிய இந்த கதை மக்களின் வரவேற்புகளை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குவதாக விஜய் ஆண்டனி அறிவித்தார்.
அதன்படி, ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து, தயாரித்து வெளியிட்டார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
ரஜினியின் 170 ஆவது படம் இது தான்…,இணையத்தில் கசிந்த கதை…,
குறிப்பாக, படம் வெளியாகி 4 நாட்களில் சுமார் ரூ. 24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ 3 ஆம் பாகத்தை இயக்க இருப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இந்த படம் மற்ற 2 படங்களைப் போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.