தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் ‘லால் சலாம்’ படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நடிகர் ரஜினி லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பின் கீழ் 170 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த மார்ச் 2 அன்று அறிவிப்புகள் வெளியானது. இந்த திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படி இருக்க, ரஜினி நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தின் கதை தொடர்பான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
‘ஆயிரத்தில் ஒருவன் 2’ குழுவில் இணையும் ஜி.வி.பிரகாஷ்…..,புதிய அப்டேட்….,
அதாவது, ‘ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரஜினி தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது, சிலர் என்கவுன்டர் மூலம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த ரஜினி இது குறித்த விசாரணையில் இறங்குகிறார். மர்மமான முறையில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள் என்று கண்டறியும் அவர் இந்த பிரச்சனையை எப்படி சரி செய்தார் என்பது தான்’ அந்த படத்தின் கதையாம்.