இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்ததது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான போது மக்கள் மத்தியில் குறைந்த அளவு வரவேற்புகளையே பெற்றது.
ஆனால், பின் நாட்களில் இது பலரும் பேசக்கூடிய திரைப்படமாக அமைந்தது. இப்படிப்பட்ட வரவேற்புகளைப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அந்த வகையில், செல்வராகவன் இயக்கத்தில் தயாராகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மலேசியாவில் களைகட்டும் ‘தளபதி 68’ போஸ்டர்….,ஆல் ஏரியாலையும் அய்யா கில்லி டா…,
இப்போது, சுமார் 13 ஆண்டுகள் கழித்து உருவாக இருக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, ‘நடிகர் தனுஷ் நடிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′ திரைப்படம் தயாராகிறது. இந்த படத்தில் கதையை செல்வராகவனிடம் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.