குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய CSK….,ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாட்டம்….,

0
குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய CSK....,ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாட்டம்....,
குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய CSK....,ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாட்டம்....,

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் குவாலிபையர் போட்டி இன்று (மே 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து சென்னை அணி சார்பில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (60), டெவான் கான்வே (40), சிவம் துபே (1), ரஹானே (17), ராயுடு (17), ஜடேஜா (22), தோனி (1), மொயீன் அலி (9) ஆகியோர் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தனர். இதன் மூலம், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

விரைவில் தயாராகும் ‘பிச்சைக்காரன் 3’….,விஜய் ஆண்டனி தகவல்…,

இப்போது, 173 என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி விருத்திமான் சாஹா (12), சுப்மான் கில் (42), ஹர்திக் பாண்ட்யா (8), தசுன் சனஹா (17), டேவிட் மில்லர் (4), விஜய் சங்கர் (14), ராகுல் தேவேதியா (3), ரசித்கான் (30) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இருந்தும், குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் தோல்வியுற்ற அணிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here