பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஓபன் பேட்மிண்டன் போட்டி
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹோ சி மின் சிட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் ஜோடி, ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை எதிர்கொண்டனர்.
இந்த இரு ஜோடிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். இதனை தொடர்ந்து இவர்கள் காலிறுதி ஆட்டத்தில் ஆர் என் குஷன் ஜந்தோ, LA குசுமாவதி ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.
பிறகு மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காடே ருத்விகா ஷிவானி, தி ட்ராங் வூவிடம் 15-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மேலும் இந்த வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.