படக்குழுவை பதட்டத்திலேயே வைத்திருக்கும் வெற்றிமாறன் – எப்போது விடுதலை கிடைக்கும்?

0
படக்குழுவை பதட்டத்திலேயே வைத்திருக்கும் வெற்றிமாறன் - எப்போது விடுதலை கிடைக்கும்?
படக்குழுவை பதட்டத்திலேயே வைத்திருக்கும் வெற்றிமாறன் - எப்போது விடுதலை கிடைக்கும்?

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிந்தது. மேலும் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரிக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் அவருடைய மார்க்கெட்டும் எகிற தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். படத்தோட ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விடுதலை 2 படத்திற்கான ஷூட்டிங் 80 சதவீதம் முதல் பார்ட் எடுக்கும் போதே வெற்றிமாறன் எடுத்து முடித்துவிட்டாராம்.

இன்னும் 20 சதவீதம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு வெறும் 20 நாட்கள் ஷூட்டிங் தான் இருக்கிறது. ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் ஷூட்டிங் எடுத்துவிட்டு வெற்றிமாறன் பேக்கப் சொல்லிவிட்டாராம். தற்போது அந்த 5 நாட்கள் காட்சிகளை தொடர்ந்து விடாமல் பார்த்து வருகிறார். இதனால் படக்குழுவினர் பதட்டத்தில் இருந்து வருகின்றனர்.

ஏய்.., இந்தம்மா.., ஓசி சோறு சாப்பிட அசிங்கமா இல்லையா.., ஜனனியை கேவலப்படுத்திய குணசேகரன்!!!

அதற்கு காரணம் வெற்றிமாறன் காட்சி நல்ல எடுக்கவில்லை என்றால் மீண்டும் அதே போல் எடுக்க கிளப்பி விடுவார். அதனால அவர் காட்சிக்கு ஓகே சொல்லுவாரா? அல்லது திரும்பவும் ஷூட்டிங் எடுப்பாரா என்று படக்குழு பதட்டத்தில் உள்ளது. மேலும் அவரிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று படக்குழு ஏக்கத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here