பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன் – அதிரடியாக எழும் புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு!!

0
பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன் - அதிரடியாக எழும் புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு!!
பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன் - அதிரடியாக எழும் புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு!!

விஜய் டிவியின் மக்களுக்கு பிடித்த பேமஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் விக்ரமன். இந்த ஷோவில் தனித்துவமாக விளையாடி, சில அரசியல் கருத்துக்களை பேசி வந்த இவர் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று மக்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் கடையில் அசீம் டைட்டில் வெற்றி பெற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் தன்னை காதலித்ததாகவும், கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று தன்னிடம் இருந்து ஏகப்பட்ட பணத்தை அபகரித்து ஏமாற்றி விட்டதாகவும், இதுபற்றி நியாயம் கேட்டல் தனது சாதியை வைத்து இழிவாக பேசி சித்ரவதை செய்தார் என விசிக தலைவர் திருமாவளவனிடமே புகார் அளித்துள்ளார்.

“தங்கலான்” படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு விபத்து – அடக்கடவுளே.., இப்படி ஆயிப்போச்சே!!

எனவே இது குறித்து திருமாவளவன், அவரின் கட்சியை சேராத 3 பெண் உறுப்பினர்களும் மேலும் 2 பேரும் சேர்ந்து விக்ரமனை விசாரணை நடத்த ஒரு குழுவை ஏற்பாடு செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் விக்ரமனுக்கு எதிராக பல சாட்சிகள் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் விக்ரமனை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here