‘பீட்டர் பாலிடம் முட்டாளா ஏமாந்து நிக்கிறேன்’ – கண்கலங்கிய வனிதா!!

3

விஜய் டிவியில் பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமடைந்த வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரை இழிவாக பேசி வந்தனர். தற்போது பீட்டர் பாலையும் பிரிந்த வனிதாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலை பிரிந்ததற்கான காரணத்தை தனது யூடூப் சேனலில் பதிவிட்டுள்ளார் வனிதா.

வனிதா

விஜய் உடன் ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் வனிதா. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்தார். மேலும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 2 வருடத்திற்கு பிறகு அவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.

இத்தனை நாட்கள் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த வனிதா, அவர்களை பிரிந்து பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார் வனிதா. பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாத நிலையில் வனிதாவை திருமணம் செய்து கொண்டார். இது போலீஸ் கேஸ் வரை சென்றது. பீட்டர் பால் போதைக்கு அடிமையானவர். பெண் சகவாசம் வேறு அதிகம் உள்ளது என அவரின் முதல் மனைவி கூறியும் எதையும் வனிதா நம்பவில்லை. தற்போது வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்ததை அடுத்து அதற்கான காரணத்தை வெளியிடாமல் இருந்த வனிதா தற்போது அதை பற்றி கூறியுள்ளார்.

அதாவது ஏற்கனவே பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் சிகெரெட் பழக்கத்திற்கு அடிமையானதால் ஏற்பட்ட விளைவு தான் இது. வனிதா எவ்வளவு கூறியும் அதனை பீட்டர் பால் கேட்காமல் சண்டை போட்டு வந்துள்ளார். ஏற்கனவே போதை பழக்கத்தில் இருந்து வெளிவர ஒரு முகாமில் சேர்க்கபட்டிருந்தாராம். அதிலிருந்து தப்பி ஓடி வந்துள்ளார். இவர் இந்த அளவிற்கு குடிப்பார் என்று கூட வனிதாவுக்கு தெரியாதாம். மேலும் அவருக்கு இது வரையிலும் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் செலவளித்துள்ளார் வனிதா.

vanitha

மேலும் வனிதாவுக்கு தெரியாமல் பல கெட்ட பழக்கங்களை தொடர்ந்து செய்துள்ளார். பீட்டர் பாலின் அண்ணன் இறந்து விட்டதால் வனிதா அவரிடம் காசை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் அந்த காசு முழுவதும் குடித்து செலவழித்துள்ளார். மேலும் கோவா செல்லும் போதும் அங்கும் குடித்து விட்டு சென்றுள்ளார்.

vanitha
vanitha

தனி ஆளாக வனிதா குழந்தைகளையும், அவரையும் நடு இரவில் காரில் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளார். சென்னைக்கு வந்த வனிதா காரில் இருந்து வீட்டிற்கு இறங்கும் நேரத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார் பீட்டர் பால். இது வரையிலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறி அந்த வீடியோவில் அழுதுள்ளார். ஆனால் மேலும் அவரை கண்டுபிடித்து நேராக சென்றாலும் அவரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார் என கண்கலங்கி பேசியுள்ளார் வனிதா.

3 COMMENTS

  1. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள் வரக்கூடாது.. அவருக்கு கடவுள் துணை மட்டுமே நிரந்தரமானது..

  2. பொதுவாக ஒரு பெண் பெண்ணாக இருந்திருந்தல் கஷ்டங்கள் வந்திருக்காது…பெண் பேயாக மாறி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி கஷடங்கள் மட்டுமே வந்து சேரும்… அது இயற்கை நியதி…யாரும் தப்பிக்க இயலாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here