வனிதா பீட்டர் பால் பற்றிய பிரச்னைக்கு சமூக வலைத்தளங்களில் பரவலாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் வனிதா பீட்டர் பாலிடம் தன்னை ஏற்றுக்கொள்ள கெஞ்சியதாக செய்திகள் பரவி வந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதத்தில் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
வனிதா பீட்டர் பால்
வனிதா பிக் பாஸ் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அறிமுகமானவர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி போட்டியில் டைட்டிலையும் கைப்பற்றியவர். இந்நிலையில் அவர் லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. மேலும் பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.
இப்பொழுது திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனர். பிரேக்கப் ஆனதற்கான காரணத்தையும் வனிதா விடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பீட்டர் பாலிடம் வனிதா தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியதாகவும், பீட்டர் பால் வனிதாவை துரத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதற்கு பதிலடி கொடுக்குமாறு வனிதா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, நான் மறுபடியும் பீட்டர் பால் கூட வாழ முயற்சி பன்றேன்னு ஒரு விஷயம் பரவிற்று இருக்கு. இந்த மாதிரி ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்தை வலைத்தளங்களில் பரப்பாதீர்கள். மேலும் என்னோட வாழ்க்கையில் யாருமே என்ன வேணாம்னு ஒதுக்குவது கிடையாது. நான் தான் மத்தவங்களை ஒதுக்குவேன்.
To all my well wishers and media friends..some baseless rumors are being circulated as news claiming me trying to patch up and get back and I being rejected.kindly refrain from hallucinating such illusions as I have never been rejected in my life by anyone. It would have been me
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 4, 2020
பிரிந்ததற்கான காரணம் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். அதன் பிறகு பீட்டர் பால் கிட்ட இந்த பற்றி பேசிட்டேன் அவரு என் கூடவும் சரி, எலிசபெத் கூடவும் சரி வாழ முடியாது தனியாக தான் இருக்க போகிறேன் என்று சொல்லி விட்டார். எனக்கு இந்த காதல் மற்றும் கல்யாணத்துல எந்த அதிர்ஷ்டமும் இல்லை. என்று கூறியுள்ளார்.