தற்கொலைக்கு தூண்டிய வழக்கு – அர்னாப் கோஸ்வாமிக்கு நீதிமன்ற காவல்!!

0

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், ‘ரீபப்ளிக் டிவி’ செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் பகுதியைச் சேர்ந்தவர் அன்வய் நாயக். ‘இன்டீரியர் டிசைனரான’ இவர், 2018ல் தனது தாயாருடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘ரீபப்ளிக் டிவி’ செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் தன்னிடம் பண மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் மும்பையின் அலிபாக் பகுதி போலீஸார் கைது செய்தனர். இவர் அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். போலீசார் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பும்படி கேட்டனர். இதை நிராகரித்த நீதிமன்றம், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here