வனிதாவும், பீட்டர் பாலும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவரின் முதல் மனைவி எலிசபெத் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பாலை வரும் டிசம்பர் 23ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனிதா – பீட்டர் பால்

இளைய தளபதி விஜய் உடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தயாரிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார். முதல் கணவருக்கு அது பிடிக்காமல் போகவே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அந்த வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்படவே அதுவும் விவகாரத்தில் முடிந்தது. இதனால் தனது குடும்பத்தை விட்டே பிரிந்து இருந்தார் வனிதா. அவர்களும் வனிதாவை கண்டுகொள்ளவும் இல்லை.

‘பாரதி கண்ணம்மா’ ஸ்பெஷல் எபிசோடாக 3 மணிநேர தொடர்!!

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் வெறுப்பை சம்பாதித்தாலும் நாளடைவில் அவரை பிடித்தும் போனது. இதற்கிடையில் அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணமும் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொள்கிறார் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பீட்டர் பால் மற்றும் வனிதா இடையே பிரேக்கப்பும் ஏற்பட்டு விட்டது. தற்போது எலிசபெத் தொடங்கிய அந்த வழக்கில் வனிதா மற்றும் பீட்டர் பால் டிசம்பர் 23 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here