இந்த 2020 இல் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் தற்போது ட்ரெண்டிங்காக இருப்பது என்னவோ வனிதா, பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது அவர்களின் பிரேக்கப் விஷயமாக வேறொரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இப்பொழுது வனிதா பீட்டர் பாலை தேடி சென்றதாகவும், அவர் வனிதாவை துரத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வனிதா – பீட்டர் பால்
வனிதா, பீட்டர் பால் இடையே ஏற்பட்ட சண்டைகள் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். சோசியல் மீடியாவில் வனிதா பற்றிய தகவல்களே பெரும்பாலும் டாப்பிக்காக உள்ளது. பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதால் பல பிரச்சனைகளை சந்தித்தார் வனிதா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பலரையும் எதிர்த்து நின்ற வனிதா, பீட்டர் பால் பற்றி எதுவும் பேசவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தான் வனிதா யூடூப் சேனலில் முதல்முதலாக இன்டெர்வியூ கொடுத்தார். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களையும் கூறினார். ஆனாலும் அதனை கலாய்த்தும் வீடியோ வெளியிட்டனர்.
இந்நிலையில் தற்போது வனிதா பீட்டர் பால் இடையே பிரேக்கப் விஷயம் செம வைரலானது. வனிதா, பீட்டர் பால் இதுவரையிலும் நடந்து கொண்டதை பற்றி அனைத்தையும் கூறினார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், குடும்பத்தை விட அவருக்கு போதை பழக்கம் தான் பெரியதாக தெரிந்ததாகவும் கூறினார். இந்நிலையில் தற்போது பீட்டர் பால் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பீட்டர் பால் அவரது நண்பரின் வீட்டில் தான் இருக்கிறாராம். வனிதாவின் யூடூப் சேனலை நடத்த யாரும் முன் வரவில்லையாம். அதனால் பீட்டர் பாலை தேடி திரும்பவும் சென்றுள்ளார் வனிதா. வனிதாவை பார்த்த பீட்டர் பால் கோவமடைந்துள்ளார். ‘எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வந்த’ என்று கண்டபடி பேசியுள்ளார்.
என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி வெளிய தலைகாட்ட முடியாம பண்ணிடல?? உன்ன பாக்கவே புடிக்கல, என் மூஞ்சிலேயே முழிக்காத. உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம் நெனச்சு தான் உன்ன கல்யாணம் பண்ணேன். ஆன என் பேரையே கெடுத்துட்டியே?? என்று அடிக்க சென்றுள்ளார் பீட்டர் பால்.
பத்திரிகையில் போட செய்தி பஞ்சம் ஆயிட்டா வனிதா வின் செய்தியை போட்டு நிரப்பிட்டா போச்சு.