விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் – அதிர்ச்சியில் மக்கள்!!

1

மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும், நேர்மையாலும் மாநிலம் முழுவதும் மிக பரவலாக பேசப்பட்டவர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆன இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர். காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்தபொழுது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குகள் இருந்ததாக எழுந்த புகாரில், அதற்கான ஆதாரங்களை திரட்டி அந்த பெப்சி நிறுவனத்திற்கு பூட்டு போட்டார். இப்படி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்பொழுது தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக ஆறு வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் மூன்று வருடம் இருக்கும் நிலையில் தனது 57வது வயதிலேயே வி.ஆர்.எஸ். கேட்டுள்ளார். இதன் காரணமாக அரசு பதவியில் இருந்து இன்னும் இரண்டு மாத காலத்தில் விடுவிக்கப்படுவர். முக்கியம் இல்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைக்கப்படும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்பது இவரது கொள்கை. இந்த வாசகம் அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சிற்கான மூன்றாவது பரிசினையும் பெற்றார். அவரது 23 ஆண்டு பணி காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்பொழுது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. See how our corrupted rulers giving respect to a honest officer, this is very ashamed, also very dangerous to our future, one day rulers (looters ) taken all to their own premises common public will go to begging, will be happened if we the people not awakens, we never ever loose like this honest officer, we all must support him

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here