தீர்வுக்கு வந்த வடிவேலு, ஷங்கர் பிரச்சனை – மீண்டும் திரையுலகில் கால் பதிக்கும் வைகைப்புயல்!!

0

திரையுலகில் தனித்துவமான தன் நடிப்பின் மூலம் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் வைகை புயல் வடிவேலு. ஆனால் சில ஆண்டுகளாக இவரை திரையில் காண முடியவில்லை. இவரின் ரசிகர்கள் பலரும் திரையில் இவரை காண தவமாய் தவமிருந்து வருகின்றனர்.

ஏற்கனவே, வடிவேலுக்கும் இயக்குனர் சங்கரின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஒரு மோதல் இருந்து வந்தது. அதாவது சங்கரின் தயாரிப்பில் உருவான 24 ஆம் புலிகேசி 2 படப்பிடிப்பிற்கு வடிவேலு சரியான ஒத்துழைப்பு தராததால் இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

இந்த பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து சரியான பதில் தரப்படவில்லை. எனவே வடிவேலுக்கு தமிழ் திரையுலக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இருந்து ரெட் கார்டு தரப்பட்டது.

இந்நிலையில் வடிவேலு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக வடிவேலுவிற்க்கும், இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here