பிரபல காமெடி நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகைகள் பலருக்கும் வலைவீச்சு நடந்து வருகிறது.
வடிவேலு:
புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்டு வாங்கி இத்தனை வருடங்கள் வரை படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. ஆனாலும் அவரின் காமெடி தான் இணையத்தையே கலக்கியது. வடிவேலு இத்தனை வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவரின் புகழ் தான் இணையம் முழுக்க இருந்தது. இந்நிலையில் தான் தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில் அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பிரபல இயக்குனரான சுராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரியா பவானி சங்கரை நடிக்க அழைத்துள்ளனர். ஆனால் அவருக்கு பல படங்கள் இருப்பதால் இந்த படத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். மேலும் கீர்த்தி சுரேஷை அழைத்துள்ளனர். அவரும் அண்ணாத்த படத்தில் பிசியாக உள்ளதால் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லையாம். இவ்வாறு முன்னணி நடிகைகளை தேடித்தேடி படக்குழு ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிவருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்