கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உணவகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்று நியூயார்க் உணவகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு அனுமதி இல்லை:
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே முக்கிய ஆயுதமாக இருந்து வருகிறது. இதில், வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால், இங்கு தடுப்பூசி செலுத்துதல் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அவர்கள் நியூயார்க்கில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்ற போது, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து,
அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது, அவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. இதனால், அவர் சாலையிலேயே நின்று பீட்சா வாங்கி சாப்பிட்டார். இது குறித்து அவர் பேசிய போது, தனக்கு கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் இருப்பதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்