காமெடியில் கலக்கி வைகைப்புயல் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. அவர் பேசும் தோரணையே பலரையும் சிரிக்க வைத்துவிடும். அதிலும் பிரண்ட்ஸ், வின்னர், சந்திரமுகி, ஆதவன், கிரி, போக்கிரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் அவரது காமெடி பயணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கட்டத்துறை, வீரபாகு, பாடி சோடா போன்ற பெயர்களில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படி இருக்க இவரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய பார்ட்டாக அமைந்த கிரி வீரபாகு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் மிகவும் தயக்கம் காட்டியிருந்தாராம். அதில் இடம்பெற்ற சில காட்சிகள் தான் அதற்கு காரணமாக இருந்துள்ளது.
அதாவது இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி அர்ஜுன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் அர்ஜுனிடம் இந்த கணபதி பேக்கரியை அக்காவை வச்சு தான் வாங்குனேன் என்று சொல்லும்படியா ஒரு டயலாக் அமைந்திருக்கும். அதுதான் வடிவேலுக்கு பெரிய ரீச் கொடுத்தது. இந்த சீனில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி விட்டாராம் வடிவேலு. அதன் பிறகு சுந்தர்.சி வற்புறுத்தியதும் தான் ஒப்புக்கொண்டாராம்.