தமிழகம் உட்பட சில மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமையால் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் ஒரு சாலை ஓரம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளதாக காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த பெண்ணின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த தழும்புகள் இருந்ததை பார்த்த காவல்துறை கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து சூரஜ் குமார் சோன்கர் என்பவரை போலீஸ் விசாரணை செய்ததில் அவர் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி கொண்டு அலைக்கழித்ததால் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவரை பாலியல் வன்கொடுமை செய்து கோடரியால் வெட்டி கொன்றேன் என்று கூறினார்.