நாடு முழுவதும் நகரங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் UPI பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சாலையோர கடைகளில் கூட QR பேமெண்ட் அட்டைகள் வைக்கும் நிலை மாறி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.92 கோடியாக இருந்த UPI பண பரிவர்த்தனை, 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.8,375 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 147 சதவீதம் கூட்டு வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் 9.90 சதவீதமாக இருந்த ரூபாய் நோட்டு புழக்கங்களும், தற்போது 7.80 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் இந்தியாவின் அபரிமிதமான டிஜிட்டல் வளர்ச்சியை குறிப்பிடுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!