தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் மாவட்ட பகுதிகளில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களில் இப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை மாநகரமே வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இத்துடன் அடுத்த 4 தினங்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here