தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இப்போது இந்த தேர்வுகளில் மாற்றம் ஏற்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அதேபோன்று தென் மாவட்டங்களிலும் இப்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல மாணவர்கள் பள்ளி புத்தகங்களை இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பொதுத் தேர்வுகளில் மாற்றம் ஏற்படுமா?? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு விரைவில் புதிய புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி விரைவில் தென் மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். எனவே தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.