மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்:
ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நாளை (பிப் 12) சென்னையின் முக்கிய பகுதிகளான தண்டயார் பேட்டை டிஹெச் ரோடு மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.
சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை – இன்றைய மாலை நிலவரம்!!
காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை நிறுத்தி வைக்கப்படும் மின்சாரமானது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் விநியோகிக்கப்படும் என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை அறிவித்து அதன்படி மக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.