#INDvsENG 2வது டெஸ்ட் – ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்!! இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையுமா??

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் நாளை சென்னையில் உள்ள மைதானத்தில் வைத்து தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் முதலாவதாக தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் தங்களது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தினர். தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இரண்டாவது போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிக தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – தமிழக மின் உற்பத்தி கழகம் அறிவிப்பு!!

இதனால் தற்போது அவருக்கு முழங்கையில் ஊசி போடப்பட்டுள்ளது. எனவே அவர் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று உறுதியாக கூறியுள்ளது. ஆர்ச்சரின் இழப்பு இங்கிலாந்து அணியை பாதிக்குமா என்று நாளை நடைபெறவுள்ள போட்டியில் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here