பெண்களின் முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகளும் நலத்திட்ட உதவிகளை அளித்த வண்ணம் உள்ளது. இதில், குறிப்பாக தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து, மாதம் ரூ 1000 வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை செய்துள்ளது. இந்த வகையில், வரும் புதன் கிழமை (ஆகஸ்ட் 30) ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி, உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்காக சிறப்பு சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, உத்திரப்பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை பெண்களுக்கு மட்டும் இலவசமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். லக்னோ, கான்பூர், மீரட், பிரயாக்ராஜ், வாரணாசி, காசியாபாத், அலிகார், மொராதாபாத், ஜான்சி, பரேலி, கோரக்பூர், ஷாஜஹான்பூர், ஆக்ரா, மதுரா-பிருந்தாவனம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இத்தகைய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சராசரி தனிநபர் வருமானம் அதிகரிப்பு., இந்தியாவிலே 2ஆம் இடம்., நிதியமைச்சர் அறிவிப்பு!!!