தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஊர்வசி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இப்படி சினிமாவில் புகழின் உச்சியில் ஜொலித்து வந்த இவர் நடிகர் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களில் பிரிந்து விட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் தனது விவகாரத்துக்கு கணவரின் குடும்பத்தார் தான் காரணம் என தனியார் சேனல் ஒன்றில் உடைத்து பேசியுள்ளார். இதுபோக விவாகரத்துக்கு பிறகு நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தேன். அதன் பிறகு தான் என்னுடைய 40 வயதில் சிவ பிரசாத் என்ற எனது நண்பரை திருமணம் செய்து கொண்டேன். மேலும் தற்போது எங்களுக்கு ஆண் பிள்ளை இருக்கிறான், இப்பொழுது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.